சுற்றுச்சூழல் மற்றும் மனிதநலத்தை பாதிக்கும் இராசாயன மாசுபாடு தொடர்பாக சர்வதேச அறிவியல் கருத்தரங்கம் கோவையில் துவக்கம்!


சுற்றுச்சூழல் மற்றும் மனிதநலத்தை பாதிக்கும் இராசாயன மாசுபாட்டினை புதிய தொழில்நுட்பத்தின் மூலம் எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பான சர்வதேச அறிவியல் கருத்தரங்கம் இன்று முதல் கோவையில் தொடங்கியுள்ளது.



இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் மாசுபாடு மதிப்பீடல் மற்றும் மீட்டுதலுக்கான கூட்டுறவு ஆராய்ச்சி மையத்தின் செயல் அலுவலர் ரவி நாயுடு மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி பேசுகையில், உலக நாடுகள் முழுவதும் 1 லட்சத்து 44 ஆயிரம் வேதிப்பொருட்கள் பல்வேறு இடங்களில் பயன்படுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. வேதிப்பொருள்களின் மூலம் ஏற்படும் பாதிப்பின் காரணமாக 4 மில்லியன் மக்கள் இறந்துள்ளதாகவும், பலருக்கு புற்றுநோய்களும் ஏற்பட்டுவருகின்றது.

இதிலிருந்து காப்பாற்றுவதற்காக உலக பாதுகாப்பு என்ற அமைப்பின் மூலம் முயற்சிகளை மேற்கொள்கிறோம். இதற்கான அறிவியல் தொழில் நுட்பத்தினை தெரிந்து கொள்ளவதற்காக கோவை வேளாண் பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் மாசுபாடு மதிப்பீடல் மற்றும் மீட்டுதலுக்கான கூட்டுறவு ஆராய்ச்சி மையம் மற்றும் நியூகாசில் பல்கலைக்கழகமும் இணைந்து மாசுபட்ட இடங்களை மீட்டெடுப்பதற்கான சர்வதேச கருத்தரங்கினை நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.

கோவையில் இன்று முதல் துவங்கி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் பல்வேறு நியுசிலாந்து, அமெரிக்கா, போன்ற 12 நாடுகள் கலந்து கொள்ளும் கருத்தரங்கில் 18 பேராசிரியர்கள் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்பங்களின் மூலம்சு ற்றுச்சூழல் மற்றும் மனிதநலத்தை பாதிக்கும் இராசாயன மாசுபாட்டினை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுத்துரைக்கவுள்ளனர். இந்தியாவின் சார்பில் 359 ஆராய்ச்சியாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

இதன் மூலம் பெறப்படும் ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்த அவர்கள் மாசு மதிப்பிடல் மற்றும் மீட்டெடுத்தலுக்கான மையம் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். இதுவரை புதிய தொழில்நுட்பம், மென்பொருள் பொறியாளர்கள், இளைஞர்களை வைத்து 5 சதவீதம் மாசினை சுத்தப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...