புத்தாண்டை வரவேற்று அதிவேகமாக வாகனங்கள் ஓட்டும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு வகையில் தண்டனை வழங்க முடிவு



புத்தாண்டு துவக்கத்தின் போது இளைஞர்கள் சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனம் மற்றும் கார்களை ஓட்டுவர். இதன் மூலம் அவர்கள் தங்களது மகிழ்ச்சினை வெளிப்படுத்தி புத்தாண்டை வரவேற்பது வழக்கம். ஆனால், அவ்வாறு சாலையில் விதிகளை மீறி வாகனத்தை இயக்கும் போதும் ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் பல நூறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

இதனை கருத்தில்கொண்டு கோவை மாநகர காவல் துறையின் சார்பில் வரும் புத்தாண்டிற்காக ஒரு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதில், புத்தாண்டை முன்னிட்டு அதிவேகத்தில் வாகனத்தை இயக்குபவர்கள் கைது செய்யப்படுவதுடன், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் அமரவைக்கப்படுவர்.

பின், அவர்களுக்கு தண்டனை வழங்குவதுடன் புதுவிதமாக இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஆர்வமுள்ள மற்றும் காவல் துறையுடன் இணைந்து செயல்பட தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஆர்வமுள்ளவர்கள், 94981 76444 என்ற தொலைபேசி எண்ணில் கோவை மாநகர தெற்கு காவல் துணை ஆணையர் அனிதா-வை தொடர்புகொண்டு தகவல் பெறலாம்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...