பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மூலம் மோசடியில் ஈடுபட்ட காவல் ஆய்வாலர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம்

கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை பதுக்கி குறைந்த எண்ணிக்கையை கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மற்றும் காவல்நிலைய தலைமை காவலர் உள்ளிட்ட இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி உயிரிழந்த நிலையில் அதற்கடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவையும் மீறி கோவை அவிநாசி சாலை கோல்டுவின்ஸ் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைக்கு பின்புறம் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக தகவல் வந்தது.

அதனடிப்படையில், அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்ட கோவை பீளமேடு காவல்நிலைய ஆய்வாளர் முரளி, அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த பார் ஊழியரான சுரேஷ் என்பவரை பிடித்ததுடன் அவரிடமிருந்து சுமார் 1400 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் 192 மது பாட்டில்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கை தயார் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார். 

இந்நிலையில், 1200 மது பாட்டில்களை ஆய்வாளர் பதுக்கியுள்ளதாக மாநகர காவல் ஆணையர் அமல்ராஜுக்கு புகார் வந்ததையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை வெளிப்படவே அவரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஒருவார காலமாக இது தொடர்பாக எவ்வித தகவலும் அளிக்காத பீளமேடு காவல்நிலைய உளவு பிரிவு தலைமை காவலர் சுப்பிரமணியமும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...