விபத்தில் இறந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காத அரசு போக்குவரத்துக் கழக பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்றம்


கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின் (22). அப்பகுதியிலேயே இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதியன்று பேரூரில் இருந்து மாதம்பட்டியை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து இவர்  மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பெஞ்சமின் பலியானார். 

இதுகுறித்து பேரூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். மேலும், விபத்தில் இறந்த பெஞ்சமீனின் மனைவி கவிதா இழப்பீடு கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் 6.57 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கச்சொல்லி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு நீதிபதி ஆணையிட்டார். இதனை செயல்படுத்த அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகிகள் தவறியதால் காந்திபுரத்தில் இருந்து ஒண்டிப்புதூர் வரை செல்லக்கூடிய 140டி பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைத்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...