விபத்தில் இறந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காத அரசு போக்குவரத்துக் கழக பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்றம்


கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின் (22). அப்பகுதியிலேயே இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதியன்று பேரூரில் இருந்து மாதம்பட்டியை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து இவர்  மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பெஞ்சமின் பலியானார். 

இதுகுறித்து பேரூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். மேலும், விபத்தில் இறந்த பெஞ்சமீனின் மனைவி கவிதா இழப்பீடு கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் 6.57 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கச்சொல்லி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு நீதிபதி ஆணையிட்டார். இதனை செயல்படுத்த அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகிகள் தவறியதால் காந்திபுரத்தில் இருந்து ஒண்டிப்புதூர் வரை செல்லக்கூடிய 140டி பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைத்தனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...