500, 1000 ரூபாய் தடையால் வேலையிழந்த தங்கநகைத் தொழிலாளி தற்கொலை

500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதால் வேலையில்லாத காரணத்தால் கோவையில் தங்கநகை தொழிலாளி தற்கொலை செய்து உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மா.ந.க வீதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் அப்பகுதியில் தங்க சங்கிலிகளை கட்டிங் செய்யும் பட்டறை நடத்தி வந்தார். இதனிடையே, மத்திய பா.ஜ.க அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்ததைத் தொடர்ந்து இவரது தொழிலில் கடந்த சில மாதங்களாக தொய்வு ஏற்பட்ட காரணத்தால் முருகானந்தம் மன உளைச்சலுடன் காணப்பட்டதுடன் இதுகுறித்து தனது உறவினர்களிடமும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவி ஸ்ரீதேவி குழந்தைகளுடன் ஞாயிறன்று காலையில் வெளியே சென்றுள்ளார். பின்னர் திரும்பி வீட்டிற்கு வந்தபோது முருகானந்தம் தூக்கில் தொங்கியபடி இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து முருகானந்தத்தை மீட்டபோது தற்கொலை செய்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வெறைட்டிஹால் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டதுடன் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பு காரணமாக தற்போது வேலையில்லாத நிலை உள்ளதாகவும், வேலை செய்த கூலி பணத்தை வசூலிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ள காரணத்தால் முருகானந்தம் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் தங்கநகை உற்பத்தி தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் பேரூர் தாலுகாவில் தொடக்கம்

கோவை பேரூர் தாலுகா தென்கரை பஞ்சாயத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் 600க...