மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்து விற்பனை செய்யும் மருந்தகத்தின் உரிமம் ரத்து செய்யப்படுமென எச்சரிக்கை


கோவையில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்யும் மருந்துக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுமென மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் தமிழ்மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் தமிழ்மணி கூறுகையில், 

மருந்தங்கள் மற்றும் மருந்து கடைகளில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் எந்த மருந்துகளையும் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 

குறிப்பாக வலி நிவாரணி மற்றும் வலி நீக்க மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது எனவும், வலி நீக்க மருந்துகளை மருத்துவர்களின் கண்காணிப்பு இல்லாமல் உட்கொள்வதால் சிறுநீரகம் மற்றும் ஈரல் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

மேலும், இந்த விதிமுறையை கடுமையாக அமல்படுத்தும் வகையில் ஒரு உதவி இயக்குநர் மற்றும் 6 மருந்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

மருந்துகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் பெட்டிக்கடைகள் மீது காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாகவும், போதியளவு மருந்துகள் கையிருப்பு இருப்பதாகவும் கூறிய அவர், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...