மருத்துவத்துக்கு பெயர் பெற்ற இடமாக கோவையை மாற்ற தொழில்கள் கூட்டமைப்பு உதவி


இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு, தமிழ்நாடு ஸ்டேட்  கவுன்சில் இணைந்து ''டான்கேர்'' என்ற ஒரு நாள் மருத்துவ கருத்தரங்கை முதல் முறையாக கோவையில் நடத்தியது.



கோவை ரெசிடன்சி டவர்ஸ்சில் நடைபெற்ற இந்த ஒருநாள் கருத்தரங்கில் தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவத் தலமாக கோவையை மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அரசு கொள்கை உருவாக்குவோர், ஒழுங்குமுறை அலுவலர்கள், தொழில்துறையினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



இதைத்தொடர்ந்து, கோவையின் மருத்துவ துறை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் குறித்து முக்கிய தொடர் விவாதங்கள் நடைபெற்றன. தரமான மருத்துவம், தொழில்நுட்ப மேம்பாடு போன்றவைகளில் கோவை முன்னணியில் உள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதில், தமிழ்நாடு அரசின் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை முதன்மை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் துவக்க உரையாற்றினார். கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கவுரவ விருந்தினரான பங்கேற்றார்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் கன்வீனர் தமிழ்நாடு ஸ்டேட் கவுன்சில் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.கே.வேலு, ஜெம் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவ மைய தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய தொழில் கூட்டமைப்பு கன்வீனர், தமிழ்நாடு ஸ்டேட் கவுன்சில் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.கே.வேலு, ''கோவை நகரில் மருத்துவ துறையானது அரசு உதவினால் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ரூ.750 கோடியில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடியாக உயரும். கோவையின் தற்போதைய மருத்துவமானது சர்வதேச தரத்துக்கு இணையாக இருப்பதோடு, அமெரிக்கா மற்றும் இந்திய நகரங்களின் கட்டணத்தை காட்டிலும் மிகவும் குறைவாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. 

எனவே, டேன்கேர் கருத்தரங்கானது ஒத்தமனங்களை ஒருங்கிணைத்து புதிய சிந்தனைகளுக்கு ஊக்கமளித்து, நகரின் மருத்துவ வளர்ச்சிக்கு உதவும்'' என்றார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...