குடியிருப்புகளுக்கு அருகே கழிவுகளை கொட்டிய லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்


கோவையில் குடியிருப்புகளுக்கு அருகே கழிவுகளை கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோவையை அடுத்த வாளையாறு - நீலம்பூர் புறவழிச்சாலையில் கழிவுகளை ஏற்றி வந்த லாரியில் இருந்து, வட மாநில இளைஞர்கள் மூட்டைகளில் இருந்த கழிவுகளை பல்வேறு பகுதிகளில் கொட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வெள்ளலூர் இடையர்பாளையம் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே மூட்டைகளை தூக்கி வீசியதை பார்த்த பொதுமக்கள், கழிவுகளை கொட்டிய லாரி மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட 7 பேரை சிறைபிடித்தனர். 



இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போத்தனூர் காவல் துறையினரிடம் லாரியையும், லாரியில் இருந்தவர்களையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், கோவை வின்செண்ட் சாலையை சேர்ந்த லாரி உரிமையாளரும், ஓட்டுநருமான சையத் அபுதாகீர் மற்றும் 6 வட மாநில இளைஞர்களை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கழிவுகள் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டதா அல்லது வேறு எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 

அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தமிழக- கேரள எல்லையோர கிராமங்கள், நீலம்பூர் புறவழிச்சாலை பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். 

மேலும், கழிவுகளை கொட்டும் லாரிகளுக்கு அபராதம் பெற்றுக்கொண்டு விடுவித்து விடுவதாகவும், கழிவுகளை கொட்டும் லாரிகளை பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். கழிவுகள் கொட்டும் லாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் காவல் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினரிடம் குழப்பம் நீடிப்பதாக கூறிய கிராம மக்கள், கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் கொண்ட குழுக்களை அமைத்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...