இருசக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் கவரும் வகையில் எம்.ஆர்.எப் "மசஸ்டர்டயர்" அறிமுகம்

இந்தியாவின் மிகப் பெரிய டயர் உற்பத்தி நிறுவனமான  எம்.ஆர்.எப்  ''மசஸ்டர்டயர்'' என்னும் இருசக்கர வாகனத்திற்கான நிகழ்ச்சியை நடத்தியது. மசஸ்டர்டயர் என்பது இருசக்கர வாகனங்களை சாலையில் நேர்த்தியாக இயக்குவது ஆகும். அதற்கு வாகனத்தின் டயர் மிகவும் கட்சிதமாக இருக்க வேண்டும். இந்நிகழ்ச்சியில், மசஸ்டர்டயர் இயக்குவதில் நேர்த்திபெற்றவர்கள் பஙகேற்று  எம்.ஆர்.எப்  டயரின் தொழில்நுட்பம் மற்றும் எவ்வித சாலையிலும் இயக்கத்தகுந்த  எம்.ஆர்.எப்  டயரை சோதனையிட்டனர்.

இவ்விழாவில்  எம்.ஆர்.எப்  லிமிட்டெட் விற்பனை நிர்வாக துணைத் தலைவர் கொஷி வர்கீஸ் பேசியதாவது:-

மக்களுக்கு மசஸ்டர் குறித்து அடிப்படை அறிவும், அனுபவமும் இருந்தால் மட்டுமே அதனை சரியான முறையில் இயக்க முடியும். டயரின் திறன், தன்மை மற்றும் தொழில் நுட்பம் ஆகியவை மசஸ்டர்க்கு மிக முக்கியம். சரியான பாதை, திறன்மிக்க டயர், அனுபவங்கள் இருப்பின் இந்த பயணம் மிக  நன்றாக அமையும். மேலும், இதில் ஈடுபடுபவர் தகுந்த பாதுகாப்புடன் ஈடுபட வேண்டும்'' என்றார்.

மசஸ்டர் டயர் இருசக்கர வாகனங்களுக்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் 150 சிசி மற்றும் அதற்கு மேலே உள்ள திறன்கொண்ட இருசக்கர வாகனத்தில் மட்டுமே இது சரியான முறையில் இயங்கும். இந்த டயர் ஒரு மென்மையான கலவை மற்றும் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடுமையான சாலையினையும் இந்த வகை டயர்கள் எளிதாக கடக்கும். செங்குத்தான வளைவுகளில் செல்லவும் இது சிறப்பாக உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், எம்.ஆர்.எப் டயர் சோதனைக் குழு மசஸ்டர் டயரினை அறிமுகம் செய்து அதன் சிறப்புகளை எடுத்துரைத்தனர். அப்போது மசஸ்டர் டயர் ஓட்டுநர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை தரும் எனவும், பல்வேறு தொழில்நுட்பங்களால் தயாரிக்கப்பட்டுள்ள மசஸ்டர் டயர் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்றும் பேசினர். தொடர்ந்து, இதன் தயாரிப்பில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள், தொழில்நுட்பம், வடிவமைப்பு உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...