கோவை கலெக்டர் அலுவலகத்தில் தாய்ப்பால் கொடுக்கும் அறை அமைத்துத்தர வேண்டும், தாய்மார்கள் வேண்டுகோள்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாம் நடைபெரும் நாளில் பெண்கள், குழந்தைகள் உட்பட வயதானவர்களும் வந்து தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அரசிடம் கொடுப்பர்.

தங்கள் மனு மீதான அரசின் நிலைப்பாடுகளை பொறுத்து அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறுசிறு போராட்டங்களிலும் ஈடுபடுவர். இது போன்ற நேரங்களில், தங்கள் மனு உரிய அதிகாரிகளிடம் சென்று, அவர்களிடம் இருந்து ஆறுதலாக ஒரு வார்த்தை வரும் வரையில் கால்கடுக்க காத்திருப்பர். இதில் கர்பிணிகளும், கைக்குழந்தைகளோடு வரும் பெண்களும் அடங்குவர்.



இன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பெண் ஒருவர் கதறி அழுத தன் கைக்குழந்தைக்கு பாலூட்ட இடம் கிடைக்காமல் அலைந்தார். பின்னர், அவ்வளாகத்தின் வெளியில் இருந்த ஏடிஎம் மையம் அருகில் சென்று அந்த பிள்ளைக்கு பாலூட்டினார். இந்த காட்சி காண்போர் நெஞ்சங்களை சற்றே உறுத்தியது.

மனு அளிக்க மட்டுமன்றி பல்வேறு அரசு அலுவல்கள் காரணமாக ஏராளமான தாய்மார்கள் ஆட்சியர் அலுவலகம் வந்து செல்கின்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க பிரத்யேகமாக ஒரு அறையை ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...