கோவை கலெக்டர் அலுவலகத்தில் தாய்ப்பால் கொடுக்கும் அறை அமைத்துத்தர வேண்டும், தாய்மார்கள் வேண்டுகோள்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாம் நடைபெரும் நாளில் பெண்கள், குழந்தைகள் உட்பட வயதானவர்களும் வந்து தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அரசிடம் கொடுப்பர்.

தங்கள் மனு மீதான அரசின் நிலைப்பாடுகளை பொறுத்து அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறுசிறு போராட்டங்களிலும் ஈடுபடுவர். இது போன்ற நேரங்களில், தங்கள் மனு உரிய அதிகாரிகளிடம் சென்று, அவர்களிடம் இருந்து ஆறுதலாக ஒரு வார்த்தை வரும் வரையில் கால்கடுக்க காத்திருப்பர். இதில் கர்பிணிகளும், கைக்குழந்தைகளோடு வரும் பெண்களும் அடங்குவர்.



இன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பெண் ஒருவர் கதறி அழுத தன் கைக்குழந்தைக்கு பாலூட்ட இடம் கிடைக்காமல் அலைந்தார். பின்னர், அவ்வளாகத்தின் வெளியில் இருந்த ஏடிஎம் மையம் அருகில் சென்று அந்த பிள்ளைக்கு பாலூட்டினார். இந்த காட்சி காண்போர் நெஞ்சங்களை சற்றே உறுத்தியது.

மனு அளிக்க மட்டுமன்றி பல்வேறு அரசு அலுவல்கள் காரணமாக ஏராளமான தாய்மார்கள் ஆட்சியர் அலுவலகம் வந்து செல்கின்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க பிரத்யேகமாக ஒரு அறையை ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...