இந்திய அளவிலான சாம்பியன்ஸ்ஷிப் ஹாக்கி போட்டியில் நடுவர்களாக தேர்வு செய்யப்பட்ட குன்னூர் இளைஞர்கள்

குன்னூரைச் சேர்ந்த ஸ்ரீராம் (23), பிரசாத் (21) ஆகிய இருவரும் ஹாக்கி இந்தியா-வால் இந்திய அளவில் நடைபெறவுள்ள ஹாக்கி 7-வது சாம்பியன்ஸ்ஷிப் போட்டியில் நடுவர்களாக பங்கேற்கவுள்ளனர்.

இப்போட்டியானது, வரும் 2017 ஜனவரி 3ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நீலகிரி ஹாக்கி அசோசியேசன் தலைவர் எஸ்.அனந்தகிருஷ்ணன் கூறியதாவது:- "கடந்த 2000-ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். 2013-ஆம் ஆண்டில் இருந்து ஸ்ரீராம் மற்றும் பிரசாத் ஆகியோரை இதற்காக தயார்படுத்தி வருகிறோம். அவர்கள் கடந்த 2 வருடமாக பல்வேறு ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று அனுபவம் பெற்றுள்ளனர்" என்றார்.

நீலகிரி ஹாக்கி அசோசியேசன் செயலாளர் ஜெ.பாலமுருகன் கூறியதாவது:- "ஸ்ரீராம் மற்றும் பிரசாத் ஆகியோர் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களது கவனம் முழுவதையம் ஹாக்கியில் மட்டுமே செலுத்தி தற்போது இந்திய அளவிலான போட்டிகளில் நடுவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...