வெள்ளிங்கிரி அடிவாரத்தில் ஈஷாவின் சிலை பதிக்கும் பணியால் வழித்தடம் மறந்த காட்டு யானை? ஊருக்குள் நுழைந்துவிடும் என பொதுமக்கள் அச்சம்



கோவை மாவட்டம், சாடிவயல் அடுத்த வெள்ளிங்கிரி மலையடிவாரப் பகுதியில் ஈஷா யோக மையம் இயங்கி வருகிறது. இப்பகுதியில் உள்ள முட்டத்துவயல் கிராமத்தில் உள்ள நீரோடை அருகே நேற்றிரவு வந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று அதே பகுதியில் தொடந்து நின்றுகொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். 

இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து யானைக்கு உடல்நலன் பாதிப்பு ஏதேனும் இருக்குமா எனவும் வனத்துறையினர் சோதனை நடத்தினர். 

உடல் சோர்வுடன் நிற்கும் அந்த யானை மக்கள் வாழும் பகுதிக்குள் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் இன்று மாலை அல்லது இரவுக்கு பின் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். 

இதனிடையே, வனப்பகுதிக்கு அருகில் உள்ள ஈஷா யோகா மையம் அப்பகுதியில் உள்ள நிலங்களில் சிலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் யானை வழிதெரியாமல் அதே பகுதியில் தொடர்ந்து நின்றிருக்கலாம் என கூறப்படுகிறது. 

கோவை சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களில் 2 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில் நீண்ட நேரமாக யானை ஒரே பகுதியில் நின்றிருப்பது முட்டத்துவயல் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை யானை நடக்க துவங்கினால் அது மக்கள் வாழும் பகுதிக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...