வெள்ளிங்கிரி அடிவாரத்தில் ஈஷாவின் சிலை பதிக்கும் பணியால் வழித்தடம் மறந்த காட்டு யானை? ஊருக்குள் நுழைந்துவிடும் என பொதுமக்கள் அச்சம்



கோவை மாவட்டம், சாடிவயல் அடுத்த வெள்ளிங்கிரி மலையடிவாரப் பகுதியில் ஈஷா யோக மையம் இயங்கி வருகிறது. இப்பகுதியில் உள்ள முட்டத்துவயல் கிராமத்தில் உள்ள நீரோடை அருகே நேற்றிரவு வந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று அதே பகுதியில் தொடந்து நின்றுகொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். 

இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து யானைக்கு உடல்நலன் பாதிப்பு ஏதேனும் இருக்குமா எனவும் வனத்துறையினர் சோதனை நடத்தினர். 

உடல் சோர்வுடன் நிற்கும் அந்த யானை மக்கள் வாழும் பகுதிக்குள் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் இன்று மாலை அல்லது இரவுக்கு பின் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். 

இதனிடையே, வனப்பகுதிக்கு அருகில் உள்ள ஈஷா யோகா மையம் அப்பகுதியில் உள்ள நிலங்களில் சிலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் யானை வழிதெரியாமல் அதே பகுதியில் தொடர்ந்து நின்றிருக்கலாம் என கூறப்படுகிறது. 

கோவை சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களில் 2 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில் நீண்ட நேரமாக யானை ஒரே பகுதியில் நின்றிருப்பது முட்டத்துவயல் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை யானை நடக்க துவங்கினால் அது மக்கள் வாழும் பகுதிக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...