ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி வீரத்தமிழர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


வீரத்தமிழர் முன்னணி சார்பில் ஜல்லிக்கட்டிற்கு தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணி அளவில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் வீரத்தமிழர் முன்னணி மண்டல பொறுப்பாளர் அருண் ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது.



செய்தியாளர்களிடம் பேசிய அவர்:- தமிழ்நாட்டில் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை தடைசெய்த உச்சநீதி மன்றத்தையும், தனி சட்டம் இயற்றி ஆவணம் செய்யாத மத்திய அரசை கண்டித்தும் வீரத்தமிழர் முன்னணி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.தமிழர்கள் 5 ஆயிரம் ஆண்டுகளாக ஏறுதழுவல் என்னும் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தி கொண்டிருக்கிறார்கள். அதை அமெரிக்காவை சேர்ந்த பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்து தடை செய்வது என்பது தமிழர்களின் பண்பாட்டின் இறையாண்மையை மீறும் செயல். 5 ஆண்டுகள் தமிழர்கள் நடத்தும் இந்த போட்டியை தொடர்ந்து 3 ஆண்டுகளாக மத்திய அரசு தடை செய்து வைத்திருக்கிறது. காவிரி உரிமை சிக்கலில் தமிழக அரசுக்கு எதிராக நடக்கும் மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய அரசு ஜல்லிக்கட்டிற்கு மட்டும் தடை விதிப்பது புறம்பானது. 

எனவே நாம் தமிழர் கட்சியும் வீரதமிழர் முன்னணி வருகின்ற தை மாதத்தில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டியை உறுதியாக இந்த மண்ணில் நடத்திக்காட்டுவோம் என்றும் இந்த மண்ணில் எங்கள் காளைகள் ஓடும் என்பதை உறுதியளிக்கிறோம். இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு பின்பாக ஒரு சர்வதேச சாதி இருக்கிறது அதற்கு கூலியாகத்தான் பீட்டா அமைப்பு செயல்படுகிறது. இதனால் தான் மத்திய அரசும் தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதித்துள்ளது. இந்த தடையை நாம் தமிழர் கட்சியும் வீரதமிழர் முன்னணி முறியடிப்போம் இவ்வாறு அவர் கூறினார். 





Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...