மனநலம் பாதிகப்பட்ட பெண்ணின் கை, கால்களை கட்டி வைத்த தாய்- காப்பகம் வேண்டி கண்ணீர்


கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பியூலா (26). திருமணமான இவரின் குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது கணவர் பியூலாவை விட்டுச் சென்றுள்ளார்.



இதனால் மனவேதனையில் காணப்பட்ட பியூலா  கடந்த இரு மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு அவரது தாய் தனலட்சுமியின் அரவணைப்பில் இருந்துள்ளார். இதனிடையே, அப்பகுதியினரை கற்களைக் கொண்டு அடிப்பதும், சாலையில் திரிவதுமாக இருந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் தலையில் கற்களைக் கொண்டு தாக்கியுள்ளார்.



இதைத்தொடர்ந்து, அவரது தாய் பியூலாவை வீட்டினுள் சிறைவத்துள்ளார். தற்போது அப்பெண்ணை வீட்டின் அருகே உள்ள கோவிலில் கை, கால்களை கட்டி அமரவைத்துள்ளார்.

இதுகுறித்து, தனலட்சுமி கூறுகையில், என் மகளுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற போது மருத்துவர்கள் மாத்திரை, மருந்துகளை மட்டும் கொடுத்துவிட்டு அனுப்பி வைத்தனர். நான் அங்கேயே உள்நோயாளியாக அனுமதிக்கக் கோரிய போது அவர்கள் மறுத்து விட்டனர். நான் காலில் விழுந்தும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தனியார் மருத்துவமனையில் அனுமதித்தால் நாள் ஒன்றுக்கு 1500 ரூபாய் கேட்கின்றனர். அந்தளவிற்கு பணம் எங்களிடம் இல்லை. அரசு நிர்வாகம் எங்களுக்கு உதவி செய்து என் மகளை குணமடையச் செய்ய வேண்டும்" என்றார்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி காவல் துறையினர் வியூலாவின் கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அகற்றினர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...