கோவையிலுள்ள குருத்வார சிங் சபா சார்பில் குரு கோபிந்த் சிங் 350வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


உலக முழுவதும் உள்ள சீக்கிய மக்கள் வரும் ஜனவரி 5ம் தேதி அன்று குரு கோபிந்த் சிங் 350வது பிறந்தநாள் விழா கொண்டாட இருக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள குருத்வார சிங் சபா சார்பில் குரு கோபிந்த் சிங் 350வது பிறந்தநாள் விழா இம்மாதம் 28ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதிவரை கொண்டாடவுள்ளனர். சீக்கிய மதகுரு மக்கள் ஒன்றிணைந்து ஜனவரி 1ம் தேதி அன்று குருத்வார சிங் சபாவில் இருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் மூலம் ஊர்வலமாக கொண்டு  அப்பகுதியை சுற்றி மீண்டும் குருத்வார சிங் சபாவிற்கு கொண்டுவரப்படுகிறது. இந்நிகழ்வில் 400க்கும் மேற்பட்ட சீக்கிய மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



பின்னர், ஜனவரி 2ம் தேதி குருத்வார சிங் சபாவில் ராஹி ஜாத பாய், குருப்ரீத் சிங், பல்பிர் சிங் ஆகியோரின் கீர்த்தனை பக்தி பாடல்கள் மாலை 7:30 மணி முதல் 9:30 நடைபெறவுள்ளது. ஜனவரி 4ம் தேதி சீக்கிய குரு சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.  அதனை தொடர்ந்து குருத்வார சிங் சபாவில் ஜனவரி 3-5ம் தேதி வரை சீக்கிய குருமார்கள் குரு கரந்த் சாஹிப் புனித நூல் படித்தல், மற்றும் இறுதிநாளில் குருநானக் கீர்த்தனா மண்டல் சார்பில் கீர்த்தனைகள் இசைக்கப்படவுள்ளது. மேலும் ஜோஹிந்தர் சிங், திலோக் சிங், ராஹி ஜாதா மற்றும் பல்பிர் சிங் ஆகியோரின் கீர்த்தனா இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கோவையில் 1970ல் சீக்கிய மதத்திற்க்காக கோவில் கட்டப்பட்டது. இன்று குருத்வார சிங் சபா உறுப்பினர்களாக 60க்கும் மேற்பட்டோர் உள்ளனர். குருத்வார சிங் சபா 2017ம் ஆண்டுடன் 50ம் ஆண்டு பொன்விழா கொண்டாட உள்ளது.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...