ஜல்லிகட்டு விவகாரத்தில் நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தகவல்

ஜல்லிகட்டு விவகாரத்தில் நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சசிகலா அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது அவர்கள் கட்சியின் விவகாரம் எனவும் நாளை சசிகலா முதல்வராகவும் முடியும் எனவும் தெரிவித்தார். 

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் ஜனவரியில் தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் ராகுல் காந்தி போன்றோர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஏன் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.



கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கையில் மத்திய நிதி அமைச்சகம் சரியாக திட்டமிடவில்லை எனவும், தவறு நிதியமைச்சகத்தில் நடந்து இருப்பதாகவும், இதை சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு  வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ.க-விற்கு புதிய செயற்குழு, பொதுக்குழு போன்ற அமைப்புகளை உருவாக்க வேண்டும். தமிழக பா.ஜ.க-விற்கு புதிய தலைமை தேவைப்படுகின்றது. வரும் ஜனவரி 6, 7- ஆம் தேதிகளில் தேசியக் குழு நடக்கும் நிலையில் இதை பரீசிலிக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் புதிய அமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம் எனவும் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், சசிகலாவிற்கு திறமையில்லை என காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்வதாகவும், சோனியா காந்தி என்ன தகுதிகளுடன் அரசியலுக்கு வந்தார் எனவும் ராகுல் காந்தி பட்டப்படிப்பு படிக்கவே இல்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

ஜல்லிகட்டு போட்டிகளில் இதுவரை எந்த காளைகளும் உயிரிழக்கவில்லை எனவும் தனது வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் வைத்து இருப்பதாகவும், ஜல்லிகட்டு விவகாரத்தில் கட்டுப்பாடுகளுடன் நீதிமன்றம் அனுமதி அளிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...