குன்னூர் சாலை பகுதியில் காட்டு எருமை நுழைந்ததால் போக்குவரத்து பாதிப்பு


குன்னூரின் முக்கிய சாலை பகுதியில் ஞாயிறன்று காலை ஒரு காட்டெருமை நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும், இதனால் சிறிது நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.



புத்தாண்டு நாளான ஞாயிறன்று (நேற்று) காலை குன்னூரின் முக்கிய சாலை பகுதியில் பொதுமக்கள் அதிகம் பேர் கூடியிருந்தனர். அப்போது ஒரு காட்டெருமை அந்த சாலையில் திடீரென நுழைந்தது. இதனைக் கண்ட மக்கள் செய்வதறியாது நின்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் காட்டெருமை சுற்றித்திறிய துவங்கியது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் இதே காட்டெருமை அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் நுழைந்துள்ளது. தொடர்ந்து, இதுபோன்ற காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழைவதால் அச்சமடைந்துள்ள மக்கள், வனத்துறையினர் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2016 அக்டோபர் மாதம் குன்னூர் சிம்ஸ் பார்க்கில் இருவரை காட்டெருமை தாக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போதும் அதுபோல் நிகழாமல்  வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிப்போர் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...