குன்னூர் சாலை பகுதியில் காட்டு எருமை நுழைந்ததால் போக்குவரத்து பாதிப்பு


குன்னூரின் முக்கிய சாலை பகுதியில் ஞாயிறன்று காலை ஒரு காட்டெருமை நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும், இதனால் சிறிது நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.



புத்தாண்டு நாளான ஞாயிறன்று (நேற்று) காலை குன்னூரின் முக்கிய சாலை பகுதியில் பொதுமக்கள் அதிகம் பேர் கூடியிருந்தனர். அப்போது ஒரு காட்டெருமை அந்த சாலையில் திடீரென நுழைந்தது. இதனைக் கண்ட மக்கள் செய்வதறியாது நின்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் காட்டெருமை சுற்றித்திறிய துவங்கியது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் இதே காட்டெருமை அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் நுழைந்துள்ளது. தொடர்ந்து, இதுபோன்ற காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழைவதால் அச்சமடைந்துள்ள மக்கள், வனத்துறையினர் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2016 அக்டோபர் மாதம் குன்னூர் சிம்ஸ் பார்க்கில் இருவரை காட்டெருமை தாக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போதும் அதுபோல் நிகழாமல்  வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிப்போர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...