ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை கோரி ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆட்சியரிடம் மனு


ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவையில் சேவல்களுடன் மாட்டு வண்டியில் வந்த ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

அதன்ஒரு பகுதியாக கோவையில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், சேவல்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் அமைப்பினர் மாட்டு வண்டியில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது தாங்கள் கொண்டுவந்திருந்த சேவல்களையும் ஒன்றுடன் ஒன்று மோதவிட்டனர். 

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு தடை விதித்து தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க முயற்சிகள் நடப்பதாகவும், இந்த போட்டிகளை தொடர்ந்து நடத்த அனுமதியளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறிய அவ்வமைப்பினர், பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், சேவல்கட்டு உள்ளிட்ட போட்டிகளை தடையை மீறி நடத்துவோம் என தெரிவித்தனர். 

இதையடுத்து மாட்டு வண்டிகளில் வந்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அதன்பின்னர் அந்த அமைப்பின் ஒரு பகுதியினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர். இதனிடையே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சேவல்களுடன் மாட்டு வண்டியில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...