பீட்டா அமைப்பு 34 ஆயிரம் உயிரினங்களை கொன்றுள்ளதாக அமெரிக்கர்கள் குற்றச்சாட்டு


ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது ஒரு மூடநம்பிக்கை என்றும், பிற்போக்குத்தனமானது என்றும், விலங்குகளைத் துன்புறுத்தி, மனிதர்களைக் காயப்படுத்தும் காட்டுமிராண்டித் தனம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடையை பெற்றுத்தந்த அமைப்பு 'பீட்டா'. 

1989-ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு விலங்குகள் காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறது. அதனால், இந்த அமைப்புக்கு வரும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு அளித்து அமெரிக்க அரசு உத்தரவிட்டது. 

இந்த நிலையில், பீட்டா அமைப்பு தொடங்கியது முதல் இதுவரை சுமார் 34 ஆயிரம் விலங்குகளை அந்த அமைபினர் கொன்று குவித்ததாக அமெரிக்கர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

பீட்டா விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிற்குள் கொண்டுவரப்படும் விலங்குகளில் 97 சதவிகிதம் கொல்லப்படுவதாக அரசு ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நுகர்வோர் சுதந்திர மையம் என்ற ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு, 'பீட்டா விலங்குகளை கொல்கிறது' (petakillsanimals.com) என்ற பெயரில் இணையதளம் ஒன்றை துவங்கி அதற்கு ஆதரவாளர்களை திரட்டி வருகிறார்கள். மேலும், அந்த நாடு முழுவதும் பீட்டா அமைப்புக்கு எதிரான விளம்பரப்பலகைகள் வைத்து, பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். 

நாளொன்றுக்கு சராசரியாக 6 விலங்குகள் பீட்டா அமைப்பினரால் கொல்லப்படுவதாக கூறும் நுகர்வோர் சுதந்திர மையம், பீட்டவிற்குள் கொண்டுவரப்படும் நாய் மற்றும் பூனைகள் அடுத்த 24 மணி நேரத்தில் கொல்லப்படுகிறது என்ற வெர்ஜீனியாவின் கால் நடைத்துறையின் 2010ம் ஆண்டு ஆய்வை சுட்டிக்காட்டியுள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...