வாலாங்குளம் பகுதி மக்களுக்கு வீட்டுவசதி வாரியம் மூலம் வீடுகள் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


வாலாங்குளம் பகுதி மக்களுக்கு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வீடுகள் கிடைக்க நடவடிக்கை கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



கோவை மாவட்டம், வாலாங்குளம் பகுதியில் 35 வருடத்திற்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு அம்மன்குளம் பகுதியில் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மீதமுள்ளவர்களுக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கிறோம். வாலாங்குளம்  பகுதியில் இருந்து காலி செய்யுங்கள் என மாவட்ட அதிகாரிகள் சொன்னார்கள். பின்னர், 2015 மே 8ம் தேதியன்று எங்களை வாலாங்குளம் பகுதியை விட்டு அகற்றி எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஒரு கடிதம் கொடுத்தனர்.

அக்கடிதம் கொடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாகியும் தற்போது வரை எங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை தங்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக எங்களுக்கு வீடுகள் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...