வாலாங்குளம் பகுதி மக்களுக்கு வீட்டுவசதி வாரியம் மூலம் வீடுகள் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


வாலாங்குளம் பகுதி மக்களுக்கு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வீடுகள் கிடைக்க நடவடிக்கை கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



கோவை மாவட்டம், வாலாங்குளம் பகுதியில் 35 வருடத்திற்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு அம்மன்குளம் பகுதியில் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மீதமுள்ளவர்களுக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கிறோம். வாலாங்குளம்  பகுதியில் இருந்து காலி செய்யுங்கள் என மாவட்ட அதிகாரிகள் சொன்னார்கள். பின்னர், 2015 மே 8ம் தேதியன்று எங்களை வாலாங்குளம் பகுதியை விட்டு அகற்றி எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஒரு கடிதம் கொடுத்தனர்.

அக்கடிதம் கொடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாகியும் தற்போது வரை எங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை தங்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக எங்களுக்கு வீடுகள் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...