சசிகலாவிற்கு கட்சியில் எந்தவித எதிர்ப்பும் இல்லை என அ.தி.மு.க-வின் மூத்த தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்


சசிகலாவிற்கு கட்சியில் எந்தவித எதிர்ப்பும் இல்லை என பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.கவின் மூத்த தலைவருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா, முதலமைச்சர் பொறுப்பினை ஏற்க வேண்டும் என நேரில் வலியுறுத்தி உள்ளேன். ஆட்சியும் கட்சி தலைமையும் ஓரே இடத்தில் இருக்க வேண்டும். இதுதான் நடைமுறையாக இருக்கின்றது. சசிகலா முதலமைச்சராக வர வேண்டும் என தனது கருத்தை பதிவு செய்துள்ளேன். 

மேலும், ஜெயலலிதா என்ன செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டு இருந்தாரோ அதை சசிகலாவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதால், தொண்டன் என்ற முறையில் சசிகலா ஆட்சிப் பொறுப்பினை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். 

சசிகலா முதலைமைச்சராவதற்கு கட்சியில் எவ்வித எதிர்ப்பும்  இல்லை. தொண்டர்களும் அவர் முதலமைச்சராவதையே விரும்புகின்றனர். சசிகலா முதலைமைச்சர் பொறுப்பினை ஏற்க வேண்டும் என அ.தி.மு.க அமைச்சர்களும், நிர்வாகிகளும் தெரிவிக்கும் கருத்திற்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதில் சொல்ல வேண்டும் என தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் வலியுறுத்தி இருப்பது தொடர்பான கேள்விக்கு, எதிர்கட்சியினர் அப்படித்தான் சொல்லுவார்கள். தி.மு.க ஆட்சிக் காலத்தில் அவரது தந்தையே கட்சி தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் இருந்தபோது அது குறித்து கருத்து கூறினார்களா? என எதிர் கேள்வியெழுப்பினார்.

இதேபோல், நாடாளுமன்ற துணை சபாநாயகர் லெட்டர் பேடினை பயன்படுத்தி சசிகலாவிடம் கடிதம் கொடுத்துள்ளது தவறான நடவடிக்கை என்ற சர்ச்சைகள் குறித்தும் தீபா பேரவை துவங்கப்பட்டுள்ளது குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, தம்பிதுரை பதில் அளிக்க மறுத்துவிட்டார். 

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் சொந்த வேலையாக வந்துள்ளதாகவும் இன்று இரவே அவர் மீண்டும் சென்னை திரும்புவதாகவும் அ.தி.மு.க வினர் தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...