ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் மற்றும் குருத்வாரா சிங் சபா இணைந்து கோவையில் சீக்கியர் போர்க்கலை நிகழ்ச்சி

குருகோவிந் சிங்-யின் 350- வது பிறந்தநாளை முன்னிட்டு ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் மற்றும் குருத்வாரா சிங் சபா இணைந்து சீக்கியர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் கோவை புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கட்கா என்னும் சிறப்பு நிகழ்ச்சி குருத்வாரா அமைப்பினரால் நடத்தப்பட்டது.



கட்கா கலை குறித்து குருத்வாரா சிங் சபாவின் துணைத் தலைவர் குர்ப்ரீத் சிங் கூறுகையில், இந்நிகழ்ச்சியின் நோக்கம் பஞ்சாப்பின் போர்க்கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகும். இதற்காக பஞ்சாப்பில் இருந்து 21 கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கட்கா என்னும் கலையில் நிபுணர்களாவர். சீக்கிய மதத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் குறித்து கோவை மக்கள் அறிந்துகொள்ள இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது" என்றார்.



கோவையை தங்களது வாழ்விடமாகக் கொண்டு சுமார் 60 சீக்கிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் குருத்வாரா சிங் சபாவில் உறுப்பினர்களாகவும் உள்ளனர். சீக்கிய மதத்தின் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட அவர்கள் ஒன்றிணைந்து 10-வது குருவின் 350-வது பிறந்த நாளை கொண்டாடினர்.



Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...