மருத்துவர்களின் அலட்சியத்தால் வாலிபர் உயிரிழந்ததாகக் கூறி மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்


கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் மகன் உயிரிழந்ததாகவும், இறப்பிற்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.

கோவை மாவட்டம், காந்திபுரம் அருகேயுள்ள சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் காந்தி என்பவரது மகன் பிரதீப் குமார் (20). இவருக்கு இன்று அதிகாலை நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருகில் உள்ள எல்லன் தனியார் மருத்துவமனையில் அவரது பெற்றோர் அனுமதித்துள்ளனர்.

மருத்துவர் செலுத்த வேண்டிய ஊசியியை செவிலியரை செலுத்துமாறு கூறிவிட்டு மருத்துவர்கள் சென்றுவிட்டதால் பிரதீப்பிற்கு சிறிது நேரத்தில் உடம்பு தூக்கிவாரி போட்டதாகவும், அப்போது செவிலியர்கள் மருத்துவர்களை அழைத்தும் மருத்துவர்கள் வரவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

பிரதீப் என்ன காரணத்தால் அவதிபடுகிறார் என்பது குறித்து மருத்துவர்கள் பரசோதிக்காமல் சென்றுவிட்டதால், சிறிது நேரத்தில் மருத்துவர் ஒரு ஊசி போட்ட பின்னர் பிரதிப்பிற்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சுயநினைவு இழந்து கீழே விழுந்த நிலையில், பிரத்தீப்பின் உயிர் பிரிந்துவிட்டதாக கூறி ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அந்த மருத்துவ அறையில் இருந்த தொலைபேசி, கதவு மற்றும் கண்ணாடியை உடைத்ததுடன் எல்லன் மருத்துவமனையின் நிறுவன மருத்துவர் இராமசந்திரனை தாக்கி உள்ளனர். 

இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் அளித்த மருத்துவர்கள் காவலர்கள் உதவியுடன் பிரதீப்பின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பிரதீப்பின் பெற்றோர் கூறுகையில், மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சை காரணமாகவே தன் மகன் உயிரிழந்ததாகவும், சம்பந்தபட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எல்லன் மருத்துவ நிர்வாகம் தெரிவிக்கையில், பிரதீப் வாந்தி எடுக்கும் போது மூச்சு குழாயில் உணவு துணுக்குகள்  அடைத்து சுயநினைவு இழந்ததாகவும், அதற்காகவே தீவிர சிகிச்சை அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், பிரதீப்பின் உறவினர்கள் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டதால் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியாமல் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வலியுறுத்தியதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே, இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவரது உறவினர்களும், அப்பகுதியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...