இஸ்கான் ரத ஊர்வலத்தை தொடர்ந்து கோவையில் போக்குவரத்து மாற்றம்


கோவையில் வரும் 7-ம் தேதி மதியம் 2  மணியளவில் இஸ்கான் ஸ்ரீ ஜெகநாத் ரகு ஊர்வலம் நடைபெற இருப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலை மார்க்கமாக உக்கடம் வரும் வாகனங்கள் சுங்கம் அல்லது பேரூர் பைபாஸ் சாலைகளை மாற்று பாதைகளாக உபயோகிக்கலாம்.

அவிநாசி சாலையில் உள்ள பழைய மேம்பாலத்திலிருந்தும், லங்கா கார்னரிலிருந்தும் பாலக்காடு ரோடு செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும் பெரியகடைவீதி மற்றும் வின்சென்ட் ரோடு மார்க்கமாக உக்கடம் பகுதியை சென்றடையலாம். பின்னர் அங்கிருந்து, மற்ற இடங்களுக்கு செல்லலாம்.

பேருந்துகள் வழக்கம் போல் டவுன்ஹால் வழியாக உக்கடம் செல்லலாம். ஆனால், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி மற்றும் ஒப்பணக்காரவீதி ஆகிய பகுதிகளுக்கு செல்ல அனுமதியில்லை.

அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்திலிருந்து தடாகம் ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் சுக்கிரவார்பேட்டை வழியாக காந்திபார்க் அல்லது பூமார்க்கெட் வழியாக செல்லலாம்.

தடாகம் சாலையிலிருந்து பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னையராஜபுரம், சொக்கம்புதுார், ராமமூர்த்தி ரோடு வழியாக சிவாலயா தியேட்டர், பேரூர் பைபாஸ் ரோடு, உக்கடம் வழியாக செல்லலாம்.

பேரூரிலிருந்து செட்டி வீதி, ராஜ வீதி வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், சிவாலயா சந்திப்பு பேரூர் பைபாஸ் சாலை மார்க்கமாக உக்கடம் அடைந்து அல்லது சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி ரோடு, சொக்கம்புதுார், பொன்னையராஜபுரம், காந்திபார்க் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

ஆர்.ஜி., வீதி மற்றும் வைசியால் வீதிக்கு, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை லாரி போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மேலும், ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி.வீதி ஆகிய சாலைகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை எந்த வாகனங்களும் நிறுத்தக்கூடாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் பேரூர் தாலுகாவில் தொடக்கம்

கோவை பேரூர் தாலுகா தென்கரை பஞ்சாயத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் 600க...