பணவர்த்தக சேவை மின்னணு மற்றும் இணையதளத்தின் மூலம் எவ்வாறு செயல்படுகிறது என ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்

கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் தேசிய அளவிலான "பணவர்த்தக சேவை மின்னணு மற்றும் இணையதளத்தின் மூலம் எவ்வாறு செயல்படுத்துவது" என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கினை அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள கிளைய்ட்டான் மாநில பல்கலைக் கழகத்தின் மேலாண்மைத் துறையின் தலைவர் முனைவர் அவிநந்தன் முகர்ஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.

இக்கருத்தரங்கில் இணையதளம் மற்றும் மின்னணுவின் மூலம் பணபரிவர்த்தனை எவ்வாறு சிறப்பாக செய்வது, இதன் முகியத்துவத்தினை பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் எடுத்துரைப்பது குறித்து 85 ஆய்வுக் கட்டுரைகளை இந்தியாவில் இருந்து பல்வேறு வர்த்தக நிபுணர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் சமர்ப்பித்திருந்தனர். இவையனைத்தும் புத்தக வடிவில் வெளியிடப்பட்டது.



மேலும், இந்நிகழ்ச்சியில் எலைகா வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனம், மும்பை நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர் கஜேந்திர கோத்தாரி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, இக்கருத்தரங்கினை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமையேற்று துவக்கி வைத்தார். முதன்மை நிர்வாக அலுவலர் எஸ்.சுந்தரராமன் கருத்தரங்க அறிக்கையினை வாசித்தார். கல்லூரி முதல்வர் பி.பாபாஞானகுமார் வரவேற்புரையாற்றினார்.



வணிகவியல் துறைகளின் தலைவர் சுமதி, அன்புமலர், சந்தானலட்சுமி, விஜிமோல் உள்ளிட்டு பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் இந்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...