தமிழக வனத்துறையில் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய கோவையில் உடற்தகுதி தேர்வு


தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 181 காலிப்பணியிடங்களை நிரப்பிடும்பொருட்டு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் இருந்து 36 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தநிலையில், பல்வேறு கட்டத் தேர்வுகளுக்குப் பின் அதில் 905 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.



இவர்களுக்கான உடற்தகுதித் தேர்வு சென்னை அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் 2016 டிசம்பர் அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அப்போது ஏற்பட்ட வர்தா புயலின் காரணமாக அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அந்த உடற்தகுதித் தேர்வு கோவை மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்றது. தமிழக வனத்துறைக்கென கோவையில் உடற்தகுதித் தேர்வு நடைபெற்றது இதுவே முதன்முறையாகும்.



இந்த உடற்தகுதித் தேர்வில் ஆண்களுக்கு 25 கிலோ மீட்டர் ஓட்டப்போட்டியும், பெண்களுக்கு 16 கிலோ மீட்டர் ஓட்டப் போட்டியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு உடற்தகுதி ஆய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து, தமிழ்நாடு வனத்துறை பணிநியமன ஆணையத் தலைவர் பி.ஜெகதீஷ் நமது நிருபரிடம் கூறுகையில், முன்னதாக மண்டல அளவில் வனத்துறை காலிப்பணியிடத்திற்கான தேர்வு நடைபெற்று வந்தது. பின், இதனை ஒருங்கிணைத்து நடத்த 2012-ம் ஆண்டு இந்த பணிநியமன ஆணையம் உருவாக்கப்பட்டது. 2015-யில் வனத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் பெறப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இத்தேர்வு நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்றுள்ள உடற்தகுதித் தேர்வில் 905 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றுள்ளனர், அதில், 270 பேர் பெண்களாவர்" என்றார்.



மேலும் அவர் கூறுகையில், தமிழக வனத்துறை முழு பணிப்பாதுகாப்பு உள்ள துறையாகும். மக்களுக்கு இதுகுறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனாலேயே தற்போது ஏராளமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களிலும் இளைஞர்கள், பெண்கள் இதில் அதிகமாக பங்கேற்று தேர்வு பெற வேண்டும்" என்றார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...