கோவையில் தனியார் பள்ளி நிறுவனர்கள் அமைப்பின் ஏ எம் பி எஸ் வெள்ளி விழா நிகழ்ச்சி ஜன.7-யில் துவக்கம்


கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளிகளின் நிறுவனர்கள் அமைப்பான ஏ எம் பி எஸ்-யின் 25 வது ஆண்டு நிரைவு விழா வரும் ஜனவரி 7 மற்றும் 8ம் தேதி நடைபெறவுள்ளது. இந்திய அரசின் யுபிஎஸ்சி முன்னாள் உறுப்பினரும் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான இ.பாலகுருசாமி, ஏ எம் பி எஸ் கல்வி கண்காட்சியை துவக்கி வைக்கவுள்ளார்.

துவக்க விழா நிகழ்ச்சியில் "சென்னை வெள்ளம்" தொடர்பான போட்டியில் பங்குபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. மேலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தேசிய அளவிலான சிறந்த கல்வியாளர்களின் கல்வி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

வெள்ளி விழாவின் முக்கிய அம்சமாக தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிபிஎஸ்இ பள்ளி அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஒன்றுகூடி கல்வி மேம்பாட்டிற்காக கலந்துரையாட உள்ளனர். மேலும், மும்பை, கோவா, கர்நாடகா, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களின் சிபிஎஸ்இ பள்ளி அமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது.

இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஏ எம் பி எஸ் அமைப்பினை உருவாக்கிய பதினொன்று கல்வியாளர்களை கவுரவிக்கும விழா நடைபெறுகின்றது. இவ்விழாவிற்கு அவிநாசிலிங்கம் பல்கலைக் கழக துணை வேந்தர் பத்மஸ்ரீ டாக்டர் கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

இதைத்தொடர்ந்து, மாலை நிறைவு விழா நிகழ்ச்சியில், யுஜிசி முன்னாள் துணைத் தலைவர், பேராசிரியர் முனைவர் எச்.தேவராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். 

பள்ளி மாணவ, மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி கல்வி தொடர்பான 76 கல்வி நிறுவனங்களின் கல்வி கண்காட்சி இரண்டு நாட்களும் நடைபெறுகின்றன.

இதுகுறித்து இவ்வாமைப்பின் பொதுச் செயலாளர் ஏ.பி.டி.போஸ் நமது நிருபரிடம் கூறுகையில், இந்திய அளவில் இதுபோன்ற கல்விக் கண்காட்சி அதிகளவில் நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் இதுவே முதன் முறை ஆகும். இந்த கண்காட்சியில் பள்ளிகளுக்கான உபகரணங்களை விநியோகிப்பவர்களுக்கென 76 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. பள்ளி நிறுவனர்களுக்கு தங்களது பள்ளியை மேம்படுத்த இதுவொரு நல்ல வாய்ப்பு ஆகும். இதில், ஆய்வகம், இருக்கைகள், நவீன கற்பிக்கும் கருவி உள்ளிட்டவற்றை வாங்கிக்கொள்ளலாம்.

மேலும், இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் ஆகியோருக்காக கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது. இந்த கருத்தரங்கில் பல்வேறு கற்பித்தல் முறை குறித்து விளக்கப்படவுள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், பார்வை குறைபாடுடையவர்களுக்கு என சிறப்பாக கற்பித்தல் முறை குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது.

கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளியில் தனி ஒதுக்கீடு உள்ளதா என்ற நமது நிருபர் கேள்விக்கு, ஒதுக்கீடு என்று தனியாக எதுவும் இல்லை. ஆனால், அவர்களுக்கென கற்பிக்கும் வழிமுறையில் மாற்றம் செய்யப்படும்" என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...