அகில உலக கிருஷ்ணபக்தி இயக்கத்தின் (இஸ்கான்) பொன்விழா கொண்டாட்டம்

அகில உலக கிருஷ்ணபக்தி இயக்கத்தின் பொன்விழாவும், 25வது ஆண்டு தேர்த்திருவிழாவின் துவக்கவிழாவும் கோவை இஸ்கான் சார்பில் ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணா கலையரங்கில் நடைபெற்றது. விழாவில், தவத்திரு ஜெயப்பதாக சுவாமி மஹாராஜூம், மண்டலச் செயலாளர் மற்றும் கோவை இஸ்கான் தலைவருமான தவத்திரு பக்தி வினோத சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 



அன்னபூர்ணா குழுமத்தலைவர் ஸ்ரீனிவாசன் வரவேற்புரை வழங்கினார். கோவை கே.ஜி மருத்துவமனையின் மருத்துவர் பக்தவத்சலம் சிறப்புரை ஆற்றினார். பின்னர் பேசிய தவத்திரு ஜெயப்பதாக சுவாமி இயக்கத்தின் செயல்பாடுகளை விளக்கினார். மேலும், அவர் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மாயாப்பூர் பிரபஞ்சத்தில் உள்ள கோள்களின் அமைப்பைச் சித்தரிக்கும் வகையில் மிகப்பிரமாண்டமான "வேத கோளரங்க ஆலயம்" ஒன்று அமைக்கப்பட்டு வருவதை அறிவித்தார். 



இஸ்கான் தலைவரும் மற்றும் மண்டலச் செயலாளர் தவத்திரு பக்தி வினோத சுவாமி தனது உரையில்; இயக்கத்தின் ஐம்பது ஆண்டுகால சாதனைகளை சுட்டிகாட்டினார். உலகளாவிய பிரச்சனைகளை தீர்க்க, வழிவழியாக வரும் நம் மரபை பின்பற்றி மக்கள் தங்களுடைய எண்ணைகளை மாற்றியமைப்பதும், ஆன்மீகத்தில் ஈடுபடுவதும் மிகமிக அவசியம் என்றுரைத்தார். கொடிசியாவின் அருகில் உள்ள ஸ்ரீ ஜெகன்னாதர் ஆலயவளாகத்தில், 60 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்டமான ஸ்ரீராதா கிருஷ்ணர் ஆலயம் கோவையின் கலாச்சார மையமாகத் திகழும் எனக் கூறினார்.  



தொடர்ந்து, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, சீனா போன்ற 25 நாடுகளில் கிருஷ்ண பக்தர்கள் நடத்திய பஜனை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...