ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத் துவக்க விழா


ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் இராதிகா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதன்மைச் செயல் அதிகாரி சுந்தரராமன் நாட்டு நலப்பணித் திட்டத்தின் நோக்கம், மாணவர்கள் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்தும்;  மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தலைமை உரையாற்றினார்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் ஆளுமைப்பண்பு மற்றும் மத்திய அரசின்  சுகாதாரத் திட்டமான “சுவச் பாரத் அபியான்” என்பதன் கீழ் சுகாதார மேலாண்மை குறித்தும், நகரத்தை எவ்வாறு சுகாதாரமாக வைத்துக் கொள்வது? மக்கும் குப்பை, மக்காத குப்பையை எவ்வாறு தரம் பிரிப்பது? என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார்.

கோவை மாவட்ட இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி  பேரிடர் மேலாண்மை, இரத்த தான முகாம் குறித்துச் சிறப்புரை ஆற்றினார். நடப்பாண்டு நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கச் செயல்பாடுகள் குறித்து கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் பாலாஜி உரையாற்றினார். இளைஞர் செஞ்சிலுவைச் சங்கக் திட்ட அலுவலர் குமரேசன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...