வேலை வாய்ப்பு முகாமிற்கு குறித்த நிறுவனங்கள் வராததால் மாணவர்கள் முற்றுகை!


கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டுவருகிறது.

இந்த கல்லூரியில், சிங்காநல்லூர் அருகே உள்ள 'ப்ரைட்ஸ் ஈவன்ட்ஸ்' என்ற தனியார் வேலைவாய்ப்பு அமைப்பினர்  ஒருங்கிணைத்த வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. இந்த முகாமில் கலந்து கொள்ள கோவை ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



பல முன்னனி நிறுவனங்கள் வரும் என்றும், வேலைவாய்ப்பு உருவாக்கித்தரப்படும் என்றும் ப்ரட் ஈவன்ட்ஸ் என்ற தனியார் அமைப்பின் சார்பில் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து ரூ.300 வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வேலை வாய்ப்பு முகாமிற்கு 26 பெரிய நிறுவனங்கள்  வருதாக கூறப்பட்ட எந்த நிறுவனமும் வரவில்லை என்றும், தங்களிடம் இருந்து வசூலித்த பணத்தை திரும்ப தர வலியுறுத்தியும்  மாணவர்கள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.



இதை தொடர்ந்து, சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...