காந்திபார்க் பகுதியில் சாலையோரங்களில் வீடு வழங்கக் கோரி சாட்டையால் அடித்து அலைகுடி மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை காந்திபார்க் பகுதியில் 20க்கும் மேற்பட்ட அலைகுடி மக்கள் சாலையோரங்களில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு  வீடு இல்லாமல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரங்களில் வசித்து வரும் நிலையில் வீடு வழங்கக் கோரி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. 



இதனிடையே, சமீபத்தில் சாலையோரங்களில் வசித்த கூடை பின்னுபவர்கள் சிலருக்கு வீடு வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தங்களுக்கும் வீடு வழங்க வேண்டும் எனக் கோரி அலைகுடி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேளம் அடித்து, சாட்டயால் தங்களைத் தாக்கி நடனம் ஆடி நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



தங்களுக்கு வீடு இல்லாததால் குழந்தைகளை படிக்கக் கூட வைக்க முடியவில்லை எனவும், தங்கள் குழந்தைகள் படிக்க வசதியாக தங்களுக்கும் வீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அலைகுடி மக்கள் வலியுறுத்தினர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு அலைகுடி மக்கள் மேளம் இசைத்து நடனமாடியபடி நூதன முறையில் மனு அளிக்க வந்தது பரபரப்பினை ஏற்படுத்தியது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...