எக்சிட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோவையில் பேரணியில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள்


மத்திய அரசு மருத்துவத் துறையில் எக்சிட் தேர்வை கட்டாயம் என அறிவித்துள்ளது. இந்நிலையில், தங்களுக்கு இத்தேர்வு தேவையற்றது எனக் கூறி கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சங்கத்தினர் இணைந்து இன்று பேரணியில் ஈடுபட்டனர்.



முன்னதாக, அக்கல்லூரி மாணவர்கள் கவுன்சில் தலைவர் விட்மின் அறிவுமதி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

5.5 வருடம் மருத்துவம் படித்த பின் தான் நாங்கள் தேர்வெழுதி வெற்றி பெறுகிறோம். இந்த 5.5 வருட இடைப்பட்ட காலகட்டத்தில் 13 தேர்வுகள் நடைபெறுகிறது. இவை அனைத்தும் மிக கடினமான தேர்வுகள் ஆகும்.

அதை முடித்தபின்தான் ஒரு மாணவர் மருத்துவர் ஆகிறார். மேலும், அப்படிப்பு முடிந்து ஒரு வருடகாலம் பயிற்சி மருத்துவராக செயல்பட வேண்டும்.

இந்நிலையில், மத்திய அரசு எக்சிட் தேர்வை கட்டாயம் என அறிவித்துள்ளது. இந்த தேர்வு முறையால் தமிழகத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். 

ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள மருத்துவப்படிப்பு முறையை இந்தியாவிற்குள் நுழைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. வெளிநாட்டிற்கு சென்று ஏராளமான பணம் செலுத்தி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுகின்றனர். இவ்வாறு வெளிநாட்டு மருத்துவப் படிப்புடன் நமது மாணவர்களையும் ஒப்பிட்டு இதுபோன்ற தேர்வுகள் நடத்துவது தவறு.

ஏற்கனவே, இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், தற்போது எக்சிட் தேர்வினை நடத்துவது மூலம் மேலும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறையும். உடனடியாக எக்சிட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்" என அவர் கூறினார்.



முன்னதாக, கோவை அரசு மருத்துவமனை முன்பு தொடங்கிய இப்பேரணி கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி சாலை வழியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...