அனைத்திந்திய பல்கலை கழகங்களுக்கிடையேயான தேசிய அளவிலான 77-வது தடகள விளையாட்டு போட்டிகள் நாளை துவக்கம்


அனைத்திந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான தேசிய அளவிலான 77-வது தடகள விளையாட்டு போட்டிகள் கோவை வ.ஊ.சி மைதானத்தில் நாளை துவங்குகிறது.

இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-

2016-17ம் ஆண்டிற்கான அகில இந்திய அளவில் விளையாட்டு போட்டிகள் நாளை துவங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், இதில் இந்தியாவில் உள்ள 150 பல்கலை கழகங்களில் இருந்து நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற உள்ளனர்.

ஆண்கள் மற்றும் பெண்ளுக்கு 22 வகை தடகள போட்டிகளில் வீரர்கள் பங்கேற்பார்கள். இப்போட்டிகளில் 180 நடுவர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

மேலும், முதன் முறையாக மின்னனு இயந்திரங்கள் கொண்டு தடகள வீரர்களின் புள்ளிகள் அளவீடு செய்யப்படவுள்ளது. இதன் துவக்க விழாவில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, அன்பழகன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு தடகள போட்டிகள் தலைவர் தேவாரம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு தலைமை செயலர் ராஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளதாக கூறினர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...