பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை கடத்த முயற்சி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பெண்னை பிடித்து போலீசார் விசாரணை

பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் சிவசாரதி எலக்ரிஷனாக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி கார்த்திகை ஜோதி இவர் பிரசவத்திற்காக சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவருக்கு பெண் குழந்தை பிறந்தது பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இன்று பிற்பகல் கார்த்திகை ஜோதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் செவிலியர்கள் சிகிச்சை அளிக்க வேறு வார்டுக்கு அழைத்துச்சென்றனர் அவரது உறவினர்களும் குழந்தையை தனியாக விட்டு விட்டு அவருடன் சென்று விட்டனர்.



இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்ட அடையாளம் தெரியாத பெண் அந்த குழந்தை எனது உறவினர்கள் குழந்தை என எடுத்துக்கொண்டு கடத்த முயன்றுள்ளார். அப்போது அக்கம்பக்கம் உள்ள மக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குள் குழந்தையின் உறவினர்கள் அங்கு வந்ததும் அந்த பெண் தப்பியோட முயன்ற போது அவரை பிடித்து வைத்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



பின்னர் அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் அந்த பெண்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர் கடத்த முயன்ற பெண் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செல்வி என்பது தெரிய வந்துள்ளது. குழந்தைகளை கடத்தி விற்பணை செய்யும் கும்பலுக்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதா இதற்கு இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்த முயன்ற சம்பவம் கர்பிணி பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...