பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை கடத்த முயற்சி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பெண்னை பிடித்து போலீசார் விசாரணை

பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் சிவசாரதி எலக்ரிஷனாக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி கார்த்திகை ஜோதி இவர் பிரசவத்திற்காக சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவருக்கு பெண் குழந்தை பிறந்தது பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இன்று பிற்பகல் கார்த்திகை ஜோதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் செவிலியர்கள் சிகிச்சை அளிக்க வேறு வார்டுக்கு அழைத்துச்சென்றனர் அவரது உறவினர்களும் குழந்தையை தனியாக விட்டு விட்டு அவருடன் சென்று விட்டனர்.



இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்ட அடையாளம் தெரியாத பெண் அந்த குழந்தை எனது உறவினர்கள் குழந்தை என எடுத்துக்கொண்டு கடத்த முயன்றுள்ளார். அப்போது அக்கம்பக்கம் உள்ள மக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குள் குழந்தையின் உறவினர்கள் அங்கு வந்ததும் அந்த பெண் தப்பியோட முயன்ற போது அவரை பிடித்து வைத்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



பின்னர் அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் அந்த பெண்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர் கடத்த முயன்ற பெண் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செல்வி என்பது தெரிய வந்துள்ளது. குழந்தைகளை கடத்தி விற்பணை செய்யும் கும்பலுக்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதா இதற்கு இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்த முயன்ற சம்பவம் கர்பிணி பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...