வேளாண்மை செழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் பச்சை சட்டை அணிந்து கோவை வழக்கறிஞர்கள் பொங்கல் கொண்டாட்டம்


தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் விவசாயிகள் தற்கொலை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு வேளாண்மை செழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் வழக்கறிஞர்கள் பச்சை சட்டை அணிந்து கோவை நீதிமன்ற வளாகத்தில் பொங்கலை கொண்டாடினர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வோரு ஆண்டும் கோவை நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன் ஒருபகுதியாக குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் 9-ஆம் ஆண்டு பொங்கல்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்வின் போது வழக்கறிஞர்கள் சர்க்கரை பொங்கல் வைத்து அனைத்து வழக்கறிஞர்களுக்கும் கொடுத்தும், மாட்டின் கொம்புகளுக்கு சாயம்பூசி அலங்கரித்தும் வழக்கறிஞர்கள் வழிப்பட்டு உற்சாகத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடினர்.

மேலும், வழக்கறிஞர்களும் இளைய தலைமுறையினரும் பொங்கல் விழாவை பற்றி தெரிந்துகொள்ளவும் இதை பின்பற்றவும் வேண்டும் என்பதற்காக தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையானது நீதிமன்ற வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருவதாகவும் குற்றவியல் வழக்கறிஞர்கள் தெரிவித்தார். 

தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் விவசாயிகள் தற்கொலை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு வேளாண்மை செழிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு பச்சை சட்டை அணிந்து பொங்கலை கொண்டாடினர். மேலும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...