ஹோண்டா டூவீலர்கள் சார்பில் கோவையில் போக்குவரத்துப் பூங்கா துவக்கம்


தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தினை கொண்டாடும் விதமாகவும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களின் தினசரி பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான பழக்கத்திற்கான தனது பொறுப்பினை அளிக்கும் வகையில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட்  அதன் 11-வது போக்குவரத்து பூங்காவை இந்தியாவில் முதன்முறையாக கோவையில் துவங்கியது.



மேலும், ஹோண்டா தனது தனிச்சிறப்பான "டிரீம் ரைடிங்" முயற்சியையும் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் துவங்கியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு பெண்ணும் வாகனம் ஓட்டுபவராக ஆக இம்மையத்தில் பயிற்சியளிக்கப்பட உள்ளது.

இதன் துவக்கவிழாவில் தீபக் எம் டாமோர், கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், தலைமையக துணை ஆணையர் மூர்த்தி, கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சரவணன், கோவை மாநகர காவல் துறை யத்வீந்தர் சிங் குலரியா, ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிட்டின் விற்பனை மற்றம் சந்தைப்படுத்துதல் மூத்த  துணைத் தலைவர் டோமாகி நாக்யாம், ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிட்டின் தேற்கு பிராந்திய துணை இயக்குநர் யோகேஷ் மதுர், மண்டல விற்பனை தலைவர் ஆஷிஷ் சௌத்ரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இவ்விழாவில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிட்டின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் மூத்த தலைவர் யத்வீந்தர் சிங் குலேரியா பேசியதாவது:-

முதலில் வருபவர்கள் தத்துவத்தின் கீழ் 1970 முதல் சாலை பாதுகாப்பினை மேம்படுத்துவது ஹோண்டாவின் முதன்மை முன்னுரிமையாக இருக்கிறது. இந்தியாவிலும் எங்களது அனைத்து தொழில் நடவடிக்கைகளிலும் பாதுகாப்பினை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக ஹோண்டா ஏற்கனவே பின்பற்றி வருகிறது.

பல்வேறு சாலை பாதுகாப்பு முயற்சிகள் மூலமாக, ஹோண்டா 2 வீலர் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை பரப்பியுள்ளது. எங்களின் சாலை பாதுகாப்பு முயற்சிகளை இங்கே விரிவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பினை ஹோண்டா 2 வீலர் இந்தியாவுக்கு வழங்கிய கோவை மாநகர காவல் துறைக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...