' பொங்கல் பண்டிகையன்று தமிழர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும்' இயக்குனர் தங்கர்பச்சன்


வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையன்று  தமிழர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சன் கோவையில் ந்டந்த பொங்கல் விழாவில் உருக்கமாக பேசினார்.

கோவை ஓருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழகறிஞர் சங்கத்தின் சார்பில்  இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இதன்  ஓரு பகுதியாக நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சன் கலந்து கொண்டு பேசினார்.தற்போது மக்கள் நல்ல உணவு கிடைக்காமல் நஞ்சு கலந்த உணவையே உன்னுவதாகவும் இதற்கு காரணம் விவசாய நிலங்கள் அழிக்கபட்டு மனைகளாக உருவாகி வருவதால் விவசாயம் அழிந்து வருவதாக பேசியவர் தற்பொழுது 60 சதவீதம் கழிப்பிட வசதிகள் இல்லாத நிலை உள்ளதாகவும் ஏவுகனை தயாரிப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு என செலவு செய்து வரும் அரசு விவசாயதிற்கு 3.5 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்குவதாகவும் அரசு வழங்கும் இலவச பொருட்களை வாங்க கையேந்தும் நிற்பது தான் தமிழனின் நிலை என்றார்.விவசாயிகளை காப்பாற்ற மத்திய அரடு திட்டம் போட்டு பணம் ஒதுக்குகிறது.ஆனால் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் திட்டங்களை செயல் படுத்துவதில்லை என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விவசாயிகளின் மரணத்தில் அக்கறையில்லாமல் பொழுது போக்கில் நாட்டம் கொண்டு தமிழர்கள் இருந்து வருகின்றோம் என தெரிவித்தார்.மேலும் வறட்சியால் 17  விவசாயிகள்  மட்டுமே உயிரிழந்ததாக தமிழக அரசு சொல்லுவது தவறானது எனவும் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் படி காவிரி நதி நீர் ஆணையம் அமைக்க மத்திய அரசை அனைத்து கட்சிகளும் ஓருங்கிணைந்து வலியுறுத்தவில்லை எனவும்  விவசாயிகளுக்கு பாதிப்பு வந்தால் பொதுமக்கள் அழிந்து போவார்கள் என தெரிவித்த தங்கர்பச்சன், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் வறட்சியால் இறந்தவர்களின் உண்மையான கணக்கினை  வெளியிட வேண்டும் எனவும் அப்போதுதான் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய முடியும் எனவும் முழு நிவாரணம் விவசாயிகளுக்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளின்  உயிரிழப்புகளை மறைப்பதால்  தமிழர்களுகும் தமிழகத்திற்கும்தான் பெரிய இழப்பு எனவும் தெரிவித்த அவர், வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையன்று  தமிழர்கள் ஓவ்வொருவரும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.இப்போதைய சூழலில்  விவசாயிகளின் உயிரை பாதுகாப்பது முக்கியமானது எனவும், ஜல்லிகட்டும் அவசியம்தான் எனவும் தங்கர்பச்சன்  தெரிவித்தார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...