கோவை ரயில் பாதை அருகே உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கோவை ரயில் நிலைய ரயில் பாதை அருகே உள்ள கடலைக்கார சந்து 3வது வீதி இந்திரா நகரில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் 48 குடியிருப்புகளும், 200க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற ரயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றுவதற்கு வந்தபோது, அப்பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்க அடையாள அட்டைகள் அனைத்தும் வைத்திருந்தும் அந்த பகுதியில் வசித்து வரும் தங்களுக்கு மாற்று இடம் வழங்காததால் வேறுவழியின்றி இருந்து வருவதாகவும், மாற்று இடம் இல்லாமல் குடும்பத்துடன் எங்கு செல்வது என்று கூறி பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், சேலம் கோட்ட ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், 15 நாட்கள் ரயில்வேயிடம் கால அவகாசம் கேட்டு அதற்கான கடிதமும் எழுதி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக ரயில்வே அதிகாரிகள் நிறுத்தினர். மேலும், அந்த பகுதியில் உள்ள 48 குடியிருப்புகளுக்கு மாற்று இடம் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...