தேசிய அளவில் பல்கலை.,க்கு இடையேயான போட்டிகளின் பங்கேற்க கோவை வந்துள்ள வீரர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என புகார்

கோவை நேரு விளையாட்டு அரங்கில் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான தேசிய அளவிலான 77-வது தடகள விளையாட்டு போட்டிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. 

அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக நடத்தப்படும் இப்போட்டிகளில், நாடு முழுவதும் உள்ள 189 பல்கலைக் கழகங்களை சேர்ந்த 2605 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற 46 போட்டிகள் நடைபெற உள்ளது. 

இதன் முதல் நாளான நேற்று ஓட்டப்பந்தயம்,  நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் போன்ற போட்டிகளுக்கான தேர்வு  சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் வருகின்ற 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தடகள போட்டிகளை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் இன்று துவங்கி வைத்தார். 

இதனிடையே, தடகள போட்டிகளில் பங்கேற்க வந்துள்ள பல்வேறு மாநில வீரர், வீராங்கனைகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விளையாட்டு மைதானத்தில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும், மைதானத்தில் இருந்து வெகு தொலைவில் வீரர்களுக்கு தங்குமிட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தடகள வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

மேலும், தங்குமிடங்களிலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும், இதனால் தனியாக அறை எடுத்து தங்க வேண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...