ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் 13 வயது சிறுமிக்கு இருதய ஈரிதழ் வால்வு மாற்று சிகிச்சை


திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்ட சிறுமிக்கு கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதய நிபுணர் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டது. சிறுமிக்கு ஈ சி ஜி எடுத்து பரிசோதனை செய்துபோது அவரது இடதுபுறத்தில் உள்ள ஈரிதழ் தடுப்பு வால்வில் (மிட்ரல் வால்வு)  கசிவு இருந்தது. அதோடு இருதயமும் பெரியதாகியிருந்தது. ஈரிதழ் வால்வு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தியாகராஜமூர்த்தியின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முதலமைச்சரின் காப்பீட்டின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.



டாக்டர் தியாகராஜமூர்த்தி தலைமையிலான டாக்டர்கள், விஜய் சதாசிவம் அசோக் ஹரிஹரன், மேனன், அருண்குமார், கிருஷ்ணன், சுஜித் ஆகியோர் அடங்கி குழுவினர் மிட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். மார்பின் வலது பகுதியிலிருந்து 3 இன்ச் அளவிற்கு துளையிட்டு, இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று தொழில்நுட்ப சிகிச்சைப்படி வெற்றிகரமாக மேற்கொண்டனர். அவரது வால்வு, சரி செய்ய இயலாத அளவுக்கு மோசமடைந்திருந்தது. அறுவை சிகிச்சையில் மாற்றி அமைத்த பின், இரண்டு மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பினார். தொடர்ந்து ஓரிரு நாளில் அவர் இயல்பாக நடக்கவும் செய்தார். தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இத்தகைய வால்வு மாற்று அறுவை சிகிச்சையை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்திலேயே இலவசமாக இந்த சிறுமிக்கு சர்வதேச தரத்தில் செய்யப்பட்டது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...