கோவையில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு


கோவை வஉசி மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களுக்கு கோவை வழக்கறிஞர்களும், பொதுமக்களும் ஆதரவு அளித்து வருகின்றனர். 



பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடும் இளைஞர்கள் மத்தியில் தங்களுடைய ஆதரவினை அளித்து வருகின்றனர். அதேபோல் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்களும் சட்டக் கல்லூரி மாணவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், பெரியவர்கள், சிறியவர்கள் மற்றும் மற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டிற்காக தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். 



கோவை மாவட்டம் முழுவதும் மனித சங்கிலி, பறை இசை மற்றும் பல்வேறு கோஷங்களாலும் ஜல்லிக்கட்டிற்கு தடைகோரும் பீட்டா அமைப்பிற்கும், இதுகுறித்து தற்போது வரை நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுக்கும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 



மேலும், போராட்டத்தில் உள்ளவர்களுக்கு பல்வேறு அமைப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து தண்ணீர், பிஸ்கட் மற்றும் உணவுகள் போன்றவற்றை வழங்கி உதவிகளை செய்து வருகின்றனர். 



இதனிடையே, மாணவர்கள் சிலர் ஒருங்கிணைத்து போராட்டம் நடைபெற்று வரும் மைதானத்தில் ஏற்படும் குப்பைகளை சுத்தம் செய்தும், குப்பை தொட்டி இல்லாததால் அதனை மூட்டைகளில் சேகரித்தும் வருகின்றனர்.



Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...