வ.உ.சி மைதானத்தில் இரவிலும் தொடர்ந்த போராட்டத்தால் பரபரப்பு!


கோவை, வ.உ.சி., மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி இளைஞர்களின் கட்டுக்கடங்காத கூட்டம் தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறது.





இந்த போராட்டத்தை கலைக்கும் நோக்கில் காவல் துறை 'ஜாமர்' மூலம் செல்போன் இணைப்புகளை துண்டித்தும், மின்தடை செய்யவும் முடிவெடுத்தாகவும், இதன், மூலம் போராட்டக்கார்களின் மீது தடியடி நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.



அதேபோல், இரவு 8 மணி அளவில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வ.உ.சி. மைதானத்திற்கு குவிந்தனர். சம்பவ இடத்திற்கு கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் அமல்ராஜ் வந்தடைந்தார். போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதை தவிர்ப்பதற்காகவும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யாத வகையிலும் போராட்டங்கள் நடைபெறும் வகையில் அப்பகுதிக்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது.



இரவு நேரங்களிலும் தொடர்ந்த போராட்டத்தில் ஐந்து ஆயிரத்திக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவினை அளித்து வருகின்றனர். இவர்களுக்கு இரவு உணவுகளும் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மூலமாகவும் மைதானத்தில் ஆங்காங்கே உணவுகள் வழங்கப்பட்டது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...