'என்னங்க சார் உங்க சட்டம், என்னங்க சார் உங்க திட்டம்' :கோவையில் நடிகர் மயில்சாமி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு!


ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும். தமிழர்களின் வீரவிளையாட்டை எதிர்த்துள்ள பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என லட்சக் கணக்கானோர் ஒன்றிணைந்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் இத்தகைய கலாச்சார பாதுகாப்பு போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தற்போது வரை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால் அரசு நிர்வாகத்தினை எதிர்த்தும் தற்போது மாணவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, மாணவர்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும், தனியார் நிறுவனத்தினரும், தன்னார்வலர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டுக்கு தனது ஆதரவினை தெரிவித்து இன்று கோவை வந்த நடிகர் மயில்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 

ஒட்டுமொத்த தமிழக மக்களின் வயிற்று எரிச்சலை கொட்டிக்கொள்ள வேண்டாம். ஜல்லிக்கட்டை  நடத்த அனுமதிக்கும் வரை உலகமெங்கும் ஏதாவது ஒரு விபத்து நடக்கும். நேற்று டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டதே அதற்கு உதாரணம். அதனால், தயவு செய்து ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தை வாழவிடுங்கள். 

கர்நாடக மாநிலம் தண்ணீர் விடாமல் இருக்கிறது, அதை தமிழக அரசு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்தந்த மாநில உரிமை பிரச்சனைகளாக கருதும் அரசு, ஜல்லிக்கட்டை ஏன் இந்திய அரசியலாக்குகிறது. இது எங்கள் மாநிலத்திற்குள் இருக்கும் உரிமை. ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும். இல்லையென்றால் இந்த போராட்டம் தொடரும்" என்றார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...