பீட்டாவிற்கு ஆதரவாக பேசிய சினிமா நடிகர்களை எதிர்த்து பேசிய நடிகர் ரஞ்சித்


கோவை வ.உ.சி மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நடிகர் ரஞ்சித் ஆதரவு தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஞ்சித்; தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பிட்டாவை தடை செய்யக்கோரியும் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் ஜாதி, மதம் இல்லாமல் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இனைந்து தமிழகம் முழுவதும் முதல்முறையாக வன்முறை இல்லாத போராட்டமாக நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் உலக நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தும் அரசியல் கட்சிகள் இல்லாமல் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு நல்ல தீர்வு கிடைக்கும். மத்திய, மாநில அரசு இந்த பிரச்சனையை அரசியாலக்கப்பட்டும் தமிழர்களின் உணர்வையும்,  உரிமையும் விளையாடுகிறது. ஆனால், இந்த போராட்டம் மாணவர்களால் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி எந்த ஒரு அரசியல் கட்சியும் தமிழர்களின் உரிமையை தகர்க்க முடியாது.

அதேபோல், பீட்டா அமைப்புக்கு ஆதரவாக பேசும் நடிகர்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இங்கு அவர்கள் பிழைத்தும் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் எடுத்துக் கொண்டும்,  பீட்டாவிற்கு உறுதுணையாக இருந்து கொண்டு டிவிட்டர் மற்றும் சமூக இணைய தளங்கள் மூலமாக பீட்டாவிற்கு ஆதரவு தெரிவிப்பது ஒரு கேவலமான ஒரு செயலாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் கோபங்களுக்கு விரைவில் அவர்கள் ஆளாகக் கூடுவார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...