கோவை ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி - மும்பை ரயிலை மறித்து சட்டகல்லூரி மாணவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.


ஜல்லிகட்டு விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத  மத்திய அரசை கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி - மும்பை ரயிலை மறித்து  சட்டகல்லூரி மாணவர்கள்  போரட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிகட்டு போட்டி நடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி  கோவையில் அனைத்து கல்லூரிகளை  சேர்ந்த மாணவர்களும் , இளைஞர்களும் மூன்றாவது நாளாக வ.உ.சி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் வ.உ.சி மைதானத்திற்கு சென்று கலந்து கொண்டனர். 

பின்னர் 50க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் வ.உ.சி மைதானத்தில் இருந்து ஊர்வலமாக சென்று கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.  கோவை ரயில் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் , ரயில் நிலையத்திற்குள் சென்று கன்னியாகுமரி - மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது மத்திய அரசு ஜல்லிகட்டு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும் , பீட்டா அமைப்பினை  கொண்டு வந்ததே பா.ஜ.க அரசுதான் எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். 

காவிரி விவகாரத்தில் ஓரு நிலைப்பாடும், ஜல்லிகட்டு விவகாரத்தில் ஓரு நிலைப்படும் எடுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், மக்கள் விழித்துக்கொண்டார்கள் எனவும் ஜல்லிகட்டுக்கு அனுமதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்களை சமரசப்படுத்திய காவல் துறையினர் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அனுப்பி வைத்தனர். சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் காரணமாக ரயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...