கோவையில் 4வது நாளாக தொடரும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம்

கோவை வ உ சி மைதானத்தில் நான்காவது நாளாக தொடரும் இளைஞர்களின் மாபெரும் எழுச்சி போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்கு இளைஞர்களின் போராட்டம் வலுக்கு நிலையில், கோவையில் இரவு நேரங்கள் கூட பாராமல் பொதுமக்கள் கடும் பனியிலும் குடும்பங்களுடன் சென்றும் மாணவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். 




இந்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பொதுமக்களும் பெரும் ஆதரவினை மாணவர்களுக்கு அளித்து வருகின்றனர். போராட்ட களத்தில் மாணவர்களுக்கு மருத்துவ முகாம், உணவு பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டும் வருகிறது. மேலும் இரவு நேரங்களில் ட்ரம்ஸ், பறை இசைகள் போன்றவற்றை மூலமாகவும் இளைஞர்கள் நடனம் ஆடியும், பாரம்பரிய விளையாட்டுக்களான கம்பு சுத்துதல் போன்றவற்றை நிகழ்த்தியும் உற்சாகத்துடன் போராடி வருகின்றனர்.  மைதானத்தில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இனைந்து பீட்டாவை தடை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டுக்கு மத்திய, மாநில அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் பல்வேறு முறையில் கோஷங்களை எழுப்பி போராடினர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...