மஞ்சள் விலை நிலையாக இருக்கும் என தமிழ்நாடு வேளாண் பல்கலை தகவல்

இந்தியா, உலகின் முன்னணியில் மஞ்சள் உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக இருக்கிறது. நாட்டின் மஞ்சள் உற்பத்தியில் தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும்  ஒரிசா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. 

தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் ஆகியவை மஞ்சள் பயிரிடப்படும் முக்கிய மாவட்டங்களாகும்.

இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த மஞ்சள் உற்பத்தியில் 80 சதவிகிதம் இந்தியாவிலேயே நுகர்வு செய்யப்படுகிறது. மீதமுள்ள மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், ஈரான், மலேசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐக்கிய அரசு நாடுகள் ஆகிய வெளிநாடுகளுக்கு மஞ்சள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் தொடர் வறட்சியினால் மஞ்சள் உற்பத்தி குறைந்துள்ளது. வர்த்தக மூலங்களின் படி, தமிழ்நாட்டில் 7 லட்சம் மஞ்சள் மூட்டைகள் நல்ல விலையை எதிர்பார்த்து இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு பருவத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மஞ்சள் உற்பத்தி அதிகரித்துள்ளதாக வர்த்தக மூலகங்கள் தெரிவித்துள்ளன. 

தமிழ்நாட்டில் தற்போது மஞ்சள் வரத்து அந்தியூர், பவானி, சத்தியமங்கலம் மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் இருந்து வருகிறது. மஞ்சள் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் உற்பத்தி குறைந்தாலும், மஹாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் மஞ்சள் வரத்து தமிழ்நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, கடந்த 20 ஆண்டுகளாக ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மஞ்சள் விலையை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கி வரும் விலை முன்னறிவிப்புத் திட்டம், ஆய்வு செய்து சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.  

ஆய்வு முடிவின் அடிப்படையில் தரமான மஞ்சளின் பண்ணை விலை அறுவடையின் போது (பிப்ரவரி- மார்ச், 2017) குவிண்டாலுக்கு ரூ.8,200 முதல் ரூ.8,500 வரை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

எனவே, விவசாயிகள் மேற்கண்ட விலை முன்னறிவிப்பின்படி விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்தான மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641003 என்ற முகவரிக்கோ அல்லது 0422-2431405 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தொடர்புகொள்ளலாம்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...