25-வது மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி கோவையில் தொடக்கம்

கோவை: கோவையில் தொடங்கிய 25-வது மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கோவை: கோவையில் தொடங்கிய 25-வது மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கோவை மாவட்ட ஸ்கேட்டிங் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் இப்போட்டிகள், வ.உ.சி., மைதானம் அருகே உள்ள ஸ்கேட்டிங் ரின்க்கில் நேற்று தொடங்கியது. யு6, 6-8, 8-10, 10-12, 12-14, 14-16 மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆண், பெண் என இருபாலாருக்கும் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும், குவாட், இன்லைன் மற்றும் அட்ஜஸ்டபுள் போன்ற 3 பிரிவுகளில் நடக்கிறது. 



முதல் நாளான நேற்று ரின்க் ரேஸ் போட்டிகள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரோடு ரேஸ் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. இந்த போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பார்கள் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவர்.



“கடந்த ஆண்டு நடந்த மாநில அளவிலான போட்டியில் கோவை மாவட்டம் 2-வது இடம் பிடித்தது. தற்போதைய போட்டிகள் இந்த ஆண்டு நடக்கும் மாநில அளவிலான போட்டிகளிக்கு தயாராகும் வகையில் இருக்கும் என நம்புகிறோம்,”என்கிறார் கோவை மாவட்ட ஸ்கேட்டிங் கூட்டமைப்பு செயலாளர் சந்திரசேகர்.



Newsletter