கோவையில் தொடங்கியது ஹுரோ ஐ-லீக் கால்பந்து போட்டிகள் : மேன்சியின் ஹாட்ரிக் கோலால் முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி

கோவை : ஹுரோ ஐ-லீக் கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை எஃப்.சி. அணி 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஏரோஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.


கோவை : ஹுரோ ஐ-லீக் கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை எஃப்.சி. அணி 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஏரோஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 



கோவை வ.உ.சி. மைதானத்தில் ஹுரோ ஐ-லீக் கால்பந்து போட்டிகள் நேற்று தொடங்கின. இதன் முதல் ஆட்டத்தில் சென்னை எஃப்.சி. அணி, இந்தியன் ஏரோஸை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்ப அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியன் ஏரோஸ் அணியின் கேப்டன் அமர்ஜித்சிங் கியாம் ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே கோல் அடித்து அதிர்ச்சியளித்தார். இதைத் தொடர்ந்து, பதில் கோலடிக்க சென்னை வீரர்கள் கடும் போராடினர். அதன்பலனாக, 31-வது நிமிடத்தில் பெட்ரோ ஜாவியர் மேன்சி குருஷ் பதில் கோலடித்து போட்டியை சமன் செய்தார். இதன்மூலம், ஆட்டத்தின் முதல்பாதியின் முடிவில் 1-1 என்ற கணக்கில் போட்டி சமனிலை பெற்றது. 



2-வது பாதியில் தொடர்ந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை சென்னை அணியினர் வெளிப்படுத்தினர். கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட சென்னை வீரர் பெட்ரோ ஜாவியர் மேன்சி குருஷ் 49 மற்றும் 64-வது நிமிடங்களில் அடுத்தடுத்து ஹாட்ரிக் கோல்களை அடித்து, அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். 76-வது நிமிடத்தில் ஜேசுராஜ் ஒரு கோல் அடித்தார். போட்டியின் முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது. 



கோவை நேரு மைதானத்தில் நவ., 1-ம் தேதி நடக்கும் அடுத்த போட்டியில் சென்னை எஃப்.சி. அணி, சர்ச்சில் பிரதர்ஸ் கோவா அணியை எதிர்கொள்கிறது. 



Newsletter